அமெரிக்காவின் கோவிட்-19 வைரஸ் பணிக்குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான டாக்டர் அந்தோனி ஃபாசி கொரோனா வைரசைப் பற்றி தவறான தகவல்களை வழங்கியதும் உண்மைகளை மறைத்ததும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது.
அந்த மின்னஞ்சல்கள் பலதரப்பட்ட துறையை சார்ந்தவர்கள் அதாவது ஆராய்ச்சியாளர்கள், அமெரிக்க நிர்வாகம் மற்றும் உளவுத்துறையில் இருப்பவர்கள் உட்பட்ட பலராலும் அனுப்பப்பட்டவை. அவையனைத்தும் கொரோனா வைரஸ் குறித்த சீன ஆய்வகத்தின் பங்கை அறிந்துகொள்ள விரும்புவதாக வேண்டுகோள் விடுத்திருந்தன. ஆனால் அவை டாக்டர் அந்தோனி ஃபாசி மற்றும் அவரது குழுவினரால் மறைக்கப்பட்டுள்ளது / முறியடிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், சீன நகரமான வுஹான் ஆய்வகத்தில் நடக்கிற வைரஸ் குறித்த ஆய்வுக்கு அமெரிக்க அரசின் நிதியை பெற்று கொடுப்பதில் அந்தோனி ஃபாசி மற்றும் அவரது குழுவினர்தான் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
மத்திய சீன நகரமான வுஹானில் முதன்முதலில் நோய்த்தொற்று வெடித்த பின்னர் பலர் குற்றம் சாட்டிய ஆய்வக – கசிவு கோட்பாட்டிற்கு (lab-leak theory) மேற்கூறிய சம்பவம் ஒரு ஊக்கத்தை அளித்துள்ளது.
டாக்டர் அந்தோனி ஃபாசி கொரோனா வைரஸின் செயற்கை தன்மையை வேண்டுமென்றே மறைத்தார்: டாக்டர் பி.எஸ்.வி.ராவ்
டாக்டர் அந்தோனி ஃபாசி கொரோனா வைரஸின் உண்மையான தன்மையை மறைத்து உலகுக்கு பொய் சொன்னதாக நியூஸ் எக்ஸ் (NewsX) எனும் 24 மணி நேர ஆங்கில செய்தி சேனலில் நடந்த விவாதத்தில், டாக்டர் பி.எஸ்.வி.ராவ் குற்றம் சாட்டினார். பிப்ரவரி 2020 முதல் கசிந்த மின்னஞ்சல்களில் டாக்டர் ஃபாசி கூறிய கூற்றுகளுக்கும், அப்போது அவர் வெளியில் கூறிய பொதுக்கருத்துக்களுக்கும் இடையிலான முரண்பாட்டை அவர் சுட்டிக்காட்டினார். 2020 பிப்ரவரியில் டாக்டர் ஃபாசி, “கொரோனா வைரஸ் பரிணாம வளர்ச்சி மூலம் வரவில்லை” என்று வைரஸின் மரபணு வரிசைமுறையை சுட்டிக்காட்டி பேசினார். ஆனாலும் அந்த காலத்திலிருந்து அவர் அனுப்பிய மின்னஞ்சல் உரையாடல்கள் விசயம் வேறு என்னவோ உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகின்றன.
டாக்டர் வி.எஸ்.வி. ராவ், “ஜனவரி 31, 2020 அன்று சண்டே கார்டியன் கட்டுரையில், “நான் குறிப்பிட்டுள்ள ஆராய்ச்சியை டெல்லி ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதில் சார்ஸ்-கோவி-2 (SARS-CoV-2)-இல் ஸ்பைக் கிளைகோ புரதம் (எஸ்) (spike glycoprotein) நான்கு சொருகல்களைக் (insertions) கொண்டுள்ளது. அவை இதற்கு முந்தைய வேறு எந்த கொரோனா வைரஸிலும் இல்லாதது. அதோடு இந்த சொருகல்கள் எச்.ஐ.வி வைரஸில் இருப்பதைப் போலுள்ளது. எய்ட்ஸ் வைரஸ் ரெட்ரோ ஆர்.என்.ஏ வகையை சார்ந்ததாகும். ஒரு ரெட்ரோ ஆர்.என்.ஏ பெருகுவதற்கு முதலில் அது டி.என்.ஏவாக மாற வேண்டும், பின்னர்தான் அது ஆர்.என்.ஏவாக மாற முடியும். ரெட்ரோ ஆர்.என்.ஏ வைரஸ் நேரடியாக ஆர்.என்.ஏ வைரஸாக மாற முடியும் என்று உலகில் இதுவரை எந்த ஆய்வும் கண்டறியவில்லை” என்று கொரோனா வைரஸ் செயற்கையாக தயாரிக்கப்பட்டது என்ற சந்தேகங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்.
அதாவது, தற்போதைய கொரோனா வைரஸ் அதன் முந்தையதின் பரிணாமம் அல்ல, இது செயற்கையாக உருமாற்றப்பட்டது என்பது டாக்டர் வி.எஸ்.வி. ராவ்-இன் வாதம்.
“ஜனவரி மாதத்தில் வேறு இரண்டு ஆராய்ச்சி வெளியீடுகள் இருந்தன. ஒன்று வுஹான் மருத்துவர்களின் நோய் குறித்த ஆராய்ச்சியும், மற்றொன்று ஹாங்காங் மருத்துவர்கள் வுஹானுக்குச் சென்று நோயைப் பற்றி படித்த மற்றொரு ஆய்வும் ஆகும். வெளியிடப்பட்ட இந்த இரண்டு ஆராய்ச்சிகளும் ஒரே விசயத்தைத்தான் சொல்கின்றன. ஒரு முன்னணி தொற்றுநோய் நிபுணர்
கிறிஸ்டியன் ஆண்டர்சன் வைரசின் சில அம்சங்கள் வடிவமைக்கப்பட்டவையாக இருப்பதாக டாக்டர் ஃபாசிக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பினார். ஆனால் ஃபாசி அதற்கு எந்த மறுப்போ, பகிரங்கமாக பதிலோ அறிவிக்கவில்லை. இது டாக்டர் ஃபாசி ஏற்கனவே வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்ட தன்மையை அறிந்திருந்தார் என்பதை இது வெளிப்படுத்துகிறது. ஆனால் அவர் அதைப்பற்றி மக்களுக்கு தெரிவிக்கவில்லை” என டாக்டர் ராவ் மேலும் கூறுகிறார்.
அதுமட்டுமல்லாது, வுஹான் வைராலஜி நிறுவனத்தில் (Wuhan Institute of Virology) நடைபெற்று வரும் பலனடையும் செயல்பாட்டு சோதனைகளுக்கு (gain of function experiments) நிதியளித்தது டாக்டர் ஃபாசியின் அலுவலகம்தான் என்று டாக்டர் ராவ் குற்றம் சாட்டினார்.
வைரசின் வடிவமைக்கப்பட்ட தன்மை குறித்து சில மருத்துவர்கள் பகிர்ந்த கருத்துகளுக்கும் சந்தேகங்களுக்கும் டாக்டர் ஃபாசி ஏன் பகிரங்கமாக பதிலளிக்கவில்லை என்ற கேள்விக்கு “ஒருவேளை பிப்ரவரி 2020-இல் வைரசின் மரபணு வரிசைமுறை (genome sequence) குறித்து கருத்துகள் வெளியானப்பின் குற்றத்தை அவர் தனது தலையில் போட்டுக்கொள்ள தயாராக இல்லாதிருக்கலாம்” என டாக்டர் ராவ் பதிலளித்தார். வுஹான் வைராலஜி நிறுவனத்தில் நடத்தப்பட்ட நோய்க்கிருமி பரிசோதனைகளில் (pathogen experiments) டாக்டர் ஃபாசிக்கு இருந்த நேரடி பங்களிப்பை மறைக்கத்தான் பீட்டர் தாஸ்ஸாக் மூலம் நிதியளித்திருக்கலாம்” என்று டாக்டர் ராவ் மேலும் கூறினார்.
கோவிட்-19-தின் தோற்றம் பற்றி அறிய டாக்டர் அந்தோனி ஃபாசியை எஃப்.பி.ஐ பேட்டி கண்டிருக்க வேண்டும்: பேராசிரியர் மாதவ் நலாபத்.
நியூஸ் எக்ஸ் செய்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொருவரான பேராசிரியர் மாதவ் நலாபத், “டாக்டர் அந்தோனி ஃபாசி ஆரம்பத்தில் இருந்தே பொய் சொன்னார் என்பதை சொல்ல தனக்கு அதிகாரம் உள்ளது” என்று கூறினார். வெளவால் வைரஸ் மற்றும் கொரோனா வைரஸ் 2019 டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்டதாக தனக்கு வைராலஜி நிபுணர்கள் அறிவித்ததாக கூறினார். அதோடு, அவர்கள் கொரோனா வைரஸ் மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் தனக்கு அறிவித்ததாக கூறுகிறார்.
“டாக்டர் ஃபாசி ஆரம்பத்தில் இருந்தே பொய் சொல்கிறார் என்று நான் உணர்கிறேன். வெளவால் வைரஸ் மற்றும் வுஹானில் காணப்பட்ட கொரோனா வைரஸ் பற்றி என்னிடம் தகவல்கள் உள்ளன. எனக்குத் தெரிந்து டாக்டர் ஃபாசிக்கு இந்த விசயத்தில் போதுமான அறிவு இல்லாதிருக்க வேண்டும் அல்லது இந்த வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது என்பது தெரிந்தும் அமைதியாய் இருக்க வேண்டும். இதில் எது உண்மையென்று எனக்குத் தெரியாது” என்று பேராசிரியர் நலாபத் கூறினார்.
“வைரஸ் ஒரு ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டது என்றும், இந்த இருள் சூழ்ந்த விவகாரத்தின் அடியாழத்தைக் கண்டறிய டாக்டர் ஃபாஸியை எஃப்.பி.ஐ விசாரித்திருக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார். “டாக்டர் ஃபாசி மற்றும் பலரும் அந்த ஆய்வகத்தின் தோற்றம் பற்றி அறிந்திருந்தனர். அவரை செய்தி சேனல்கள் பேட்டி காணாமல் விட்டிருக்கலாம். ஆனால் எஃப்.பி.ஐ-இல் எடுத்துக்கொண்ட உறுதிமொழி?” என்று பேராசிரியர் நலாபத் வினவினார்.
டாக்டர் ஃபாசிக்கு எதிராக செயல்படுகிறவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்படும் என்றும், டாக்டர் ஃபாசி மற்றும் வைரஸின் செயற்கைத் தன்மைக்கு எதிராகப் பேசினால் அவர்களின் வாழ்க்கை அழிக்கப்படும் என்றும் மறைமுகமாக மிரட்டப்பட்டதாக பேராசிரியர் மாதவ் நலாபத் குற்றம் சாட்டினார். “மிரட்டலை விட வெறுக்கத்தக்கது உண்மையை மூடிமறைத்ததுதான். எந்தவொரு விஞ்ஞானியும் டாக்டர் ஃபாசிக்கு எதிராகப் பேசினால் அவரது வாழ்க்கை அழிக்கப்படும் என்று கண்டிப்பாக எச்சரிக்கப்பட்டது” என்று பேராசிரியர் நலாபத் கூறினார்.
“கொரோனா வைரஸ் இயற்கையாக தோன்றியது என்பது முழுமையான முட்டாள்தனம் என்று அமெரிக்காவிலும் ஜப்பானிலும் உள்ள நண்பர்கள் எனக்கு விரிவாக விளக்கினர். அவரை அம்பலப்படுத்தும்படி அவர்களிடம் கேட்டேன். ஆனால் அவர்கள், நாங்கள் பேசினால், டாக்டர் ஃபாசியும் அவரது கும்பலும் எங்களையும் எங்கள் நற்பெயரையும் அழித்துவிடுவார்கள் என்று அவர்கள் அஞ்சினர். வைரஸ் மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்டதாகவும் டாக்டர் ஃபாசி 2020-ல் கூறியது போல இயற்கையானது அல்ல என்றும் நம்பிக்கைக்குரிய மருத்துவர்கள் கூறுகிறார்கள்” என்று பேராசிரியர் நலாபத் கூறினார்.
டாக்டர் அந்தோனி ஃபாசியைக் காப்பாற்றியதற்காகவும், அவருடனான சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் (Chinese People’s Liberation Army– PLA) ஒத்துழைப்புக்காகவும் பேராசிரியர் நலாபத் ஜனநாயகக் கட்சியினரை கடுமையாக சாடினார். “ஜனநாயகவாதிகளுக்கு வுஹான் வைராலஜி நிறுவன ஆராய்ச்சியில் சீன மக்கள் விடுதலை இராணுவத்திற்கு 70 சதவீதம் பங்குள்ளது என்பதும் இவர்களுக்கிடையில் நெருக்கமான ஒத்துழைப்பு இருப்பதும் நன்கு தெரியும். அவர்கள் உயிர் ஆயுதங்களைப் தேடிக்கொண்டிருந்தார்கள். டாக்டர் ஃபாசி தாஸ்ஸாக் மூலம் அனுப்பிய பணம் பி.எல்.ஏ-க்கு செல்கிறது” என்கிறார் நலாபத்.
டாக்டர் ஃபாசி வைரஸ் உருவாக்கத்திற்காக சீனாவிற்கு வெளியிலிருந்து தாராளமான நன்கொடைகள் கிடைக்கும்படி செய்தார்: தீபக் வோஹ்ரா
வுஹானில் உள்ள ஒரு ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டது என்ற நியூஸ் எக்ஸ் செய்தி நிகழ்ச்சியில் மற்றொரு பங்கேற்பாளர் தூதர் தீபக் வோஹ்ரா ஆவார். “டாக்டர் ஃபாசியின் உத்தரவின் பேரில் வுஹானில் உள்ள ஒரு ஆய்வகத்தில் இந்த வைரஸ் தயாரிக்கப்பட்டது என்றும், இதுபோன்ற சோதனைகளுக்கு பணம் முதலீடு செய்ய பீட்டர் தாஸ்ஸாக் பாலமாக இருந்தார்” என்றும் அவர் கூறினார்.
“2014-ஆம் ஆண்டில், பலனடையும் செயல்பாட்டு சோதனைகளுக்கு எதிராக அமெரிக்கா ஒரு தடை விதித்தது. மூன்று வைரஸ்களை உயிர் ஆயுதமாக்கும் முயற்சிக்கு அமெரிக்க ஐக்கியத்தின் நிதி (US federal fund) வழங்குவது தடைசெய்யப்பட்டது. எனவே, டாக்டர் ஃபாசி வூஹானில் கொரோனா வைரஸை உருவாக்குவதற்கு வெளியிலிருந்து உதவி செய்தார். அவர் வீட்டிலேயே ஆராய்ச்சி செய்வதை நிறுத்திவிட்டு, சீனாவில் அதை மேற்கொள்ள நிதி வழங்கினார். ஒரு உயிர் ஆயுதத்தை உருவாக்குவதற்கான அமெரிக்க முதலீட்டை ஏற்றுக்கொள்வதில் சீனர்கள் மகிழ்ச்சியடைந்தனர்” என்று வோஹ்ரா கூறினார்.
முன்னதாக, கோவிட்-19-இன் செயற்கை தோற்றத்தை பரிந்துரைத்த இந்திய ஆராய்ச்சியாளர்கள் அழுத்தம் காரணமாக ஆய்வைத் திரும்பப் பெறவேண்டிய கட்டாயத்தில் இருந்ததாகக் கூறினர்.
‘Scientists were threatened Anthony Fauci and his gang will destroy careers and reputation’: Indian experts make explosive claims after emails become public