Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

நேற்றுவரை, சிங்களவர் எதிர் தமிழர்கள் என்றும் அல்லது சிங்களவர் எதிர் தமிழர்கள் எதிர் மலையகத்தமிழர்கள் என்றும் அல்லது சிங்களவர் எதிர் தமிழர்கள் எதிர் மலையகத்தமிழர்கள் எதிர் இசுலாமியர்கள் என்றுமாக இருந்த இலங்கை இன்று இலங்கை மக்கள் எதிர் ஆட்சியாளர்கள் என்று மாறிப்போய்விட்டது.

இந்த மாற்றத்திற்கு காரணம் போர் மற்றும் அதன் நிதிச்சுமைகள்தான் என்றும்; இல்லையில்லை கொரோனா மற்றும் அதன் பாதிப்புகள்தான் என்றும்; இல்லவேயில்லை, எல்லாவற்றுக்கும் காரணம் சீனாவின் ஆக்கிரமிப்புதான் என்றும்; கொஞ்சம் முக்கலும் முனகலுமாக இந்தியா என்றும் அமெரிக்கா என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால், பேராசிரியர் அகிலன்‌ கதிர்காமர்‌ அவர்களின் கூற்றை நோக்கினால் எல்லாவற்றிலும் முதன்மையானக் காரணம் சர்வதேச நாணய நிதியம் (IMF) என்பது தெரிய வருகிறது. சர்வதேச நாணய நிதியமானது (IMF) 1950 முதல் இலங்கையில் காலூன்றியுள்ளது. 2016 வரைக்குமாக 16 முறை இலங்கை கடன்களை வாங்குவதற்கு உதவியுள்ளது.

இலங்கையின் மொத்த கடனில், சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையின் பேரில்‌ உலக வங்கியும் ஆசிய அபிவிருத்தி வங்கியும்‌ இணைந்து வழங்கிய கடன் 7645 மில்லியன் டாலர்‌. இது மொத்த கடனில் 22 சதவீதமாகும்.

எல்லாவற்றுக்கும் உச்சமாக இலங்கை தனது மொத்த வளத்தையும் அடமானம் வைத்து Black Rock நிறுவனத்தில் வாங்கிய கடன் 16,383 டாலர்.‌ இது மொத்த கடனில் 47 சதவீதமாகும்.

ஆக மொத்தம் 69 சதவீத கடன் உலக கொள்ளையர்களிடமிருந்து பெறப்பட்டதாகும்.

அடுத்து ஐப்பான்‌ வழங்கிய தொகை‌ 3560 மில்லியன் டாலர்‌. 10 சதவீதம்.

சீனா வழங்கிய தொகை‌ 3388 மில்லியன் டாலர்.‌ 10 சதவீதம்.

இந்தியா வழங்கிய தொகை‌ 859 மில்லியன் டாலர். 2.3 சதவீதம்.

நாம் மேலே பார்த்த Black Rock என்கிற நிதி நிறுவனம் ஏழைநாடுகளை கபளீகரம்‌ செய்வதற்கென்று உருவாக்கப்பட்ட அமைப்பாக கருதப்படுகிறது. 100 முதலீட்டாளர்களைக் கொண்ட இந்நிறுவனத்தின்‌ மொத்த வைப்பு நிதி 10 ட்ரில்லிலயன்‌ டாலர்‌ என சொல்லப்படுகிறது. 2022 ஜனவரியில் வெளியான ஒரு அறிக்கையின் படி, இந்நிறுவனம் 30 நாடுகளில்‌ 70 கிளைகளைக் கொண்டுள்ளதாக பேராசிரியர் அகிலன்‌ கதிர்காமர்‌ கூறுகிறார்.

இந்த Black Rock மூலமாக இலங்கையின் 5 வருட அவகாச அடமான பத்திரத்தில் 39 சதவீதத்தையும்‌,‌ 10 வருட அவகாச அடமான பத்திரத்தில் 44 சதவீதத்தையும்‌ அமெரிக்க முதலீட்டாளர்கள் வாங்கியிருக்கிறார்கள். இதற்கு அடுத்தபடியாக, முறையே 38 சதவீதம், 39 சதவீதம் என்ற அளவில் வாங்கிய ஐரோப்பிய முதலீட்டாளர்கள் இரண்டாம்‌ இடத்தை பிடிக்கின்றனர்‌. ஆசிய முதலீட்டாளர்கள்‌ 23 மற்றும் 17 சதவீதங்களை வாங்கியுள்ளனர்.

ஆக இலங்கையின் நிகழ்ச்சிப்போக்கை உலக முதலீட்டாளர்கள் பயன்படுத்தியும் வழிநடத்தியும் பலனடைந்துமுள்ளனர். அதன் மூலம் அந்நாட்டை படுகுழியிலும் தள்ளியுள்ளனர்.

இலங்கையை வழிநடத்துதல்

உலகம் இரண்டு பனிப்போர்களுக்குப் பின்னால் புதிய வழிநடத்தலை எதிர்கொண்டது என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான். படைகளின் மூலம் அல்லாது நிதிநிறுவனங்கள் மூலமாக நாடுகளை கையகப்படுத்தல் என்பதுதான் அது. அதற்காக உருவாக்கப்பட்டவைகள்தான் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம் உள்ளிட்ட எல்லாமும். உலகமயமாக்கல் என்பது அதன் வழியாக நடைபெற்றதுதான்.

இந்த புதிய வழிநடத்தலுக்காக ஒரு புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது. அதாவது ஒவ்வொரு நாட்டிலுமுள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற ஆட்சியாளர்களையும் நிர்வாக ஆட்சியாளர்களையும் வழிநடத்துவதற்கான மறைமுக – இரகசிய படை ஒன்று உருவாக்கப்பட்டது. அதற்காக ஏகாதிபத்திய நாடுகளின் உளவுத்துறை வல்லுனர்களைக் கொண்ட பொருளாதார அடியாட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களின் முதன்மையான வேலை என்பது எந்த நாடுகளை கைப்பற்ற வேண்டுமோ அந்த நாடுகளில் உள்ள N.G.O-க்களை ஒருங்கிணைக்க வேண்டும் அல்லது அங்கு N.G.O-க்களை உருவாக்க வேண்டும்.

இப்படி உருவாக்கப்பட்ட அல்லது ஒருங்கிணைக்கப்பட்ட N.G.O-க்கள் மூலம் பணக்கார நாடுகளால் – ஏகாதிபத்தியங்களால் முன்வைக்கப்படுகிற நலத்திட்டங்களுக்கான கோரிக்கைகள் முன்னெழுப்பப்படும்.

அதேநேரத்தில் பொருளாதார அடியாட்கள் அந்நாடுகளிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களையும் (இது இந்தியாவில் பிரதமர் முதல் வார்டு கவுன்சிலர்கள் வரையிலுமாக), நிர்வாக ஆட்சியாளர்களையும் (இது இந்தியாவில் இப்போதிருக்கிற நிதி ஆயோக்கின் அனைத்துப் பிரதிநிதிகளிலிருந்து மத்திய மாநில செயலர்கள் முதல் கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்டவர்கள் வரைக்குமானது) தங்கள் வசம் கொண்டுவருகிற வேலையை செய்வார்கள்.

இதன் வழியே அந்நாடுகளில் அரசியல் கோரிக்கைகளும் அரசியல் இயக்கங்களும் மேலெழும். இந்த அரசியல் கோரிக்கைகளுக்கும் அரசியல் இயக்கங்களுக்கும் மாற்றாக எதுவும் தோன்றாதபடி அந்நாடுகளின் பாதுகாப்பு அமைப்புகள் பலபடுத்தப்படும். முக்கியமாக அந்நாடுகளின் உளவுத்துறை முழுவதும் இதை அடிப்படையாகக் கொண்டே செயல்படும்.

இதில் N.G.O-க்களின் பங்கு பிரமாண்டமானது. இவர்களின் அரசியல் செயல்பாடுகள் இல்லாமல் இந்தியாவில் காடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு தாரைவார்ப்பது நடக்கவில்லை. அதுபோலத்தான் இலங்கையில் திடீர் இயற்கை விவசாயம் என்பதும் கொண்டுவரப்படவில்லை.

இத்துனூண்டு இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட N.G.O-க்களின் எண்ணிக்கை 1250 முதல் 1300 வரைக்குமாக உள்ளதென சொல்லப்படுகிறது. இதில் சுமார் 250 N.G.O-க்கள் சக்திவாய்ந்தவைகளாக கருதப்படுகின்றன. இவைகள் போக எண்ணிலடங்கா மக்கள் குழுக்கள் என்ற பேரிலான தன்னார்வக் குழுக்கள் உள்ளன.

ஆக இலங்கையானது பண்டார நாயக்கக்காளாலோ அல்லது இராஜபட்சேக்களாலோ இல்லையென்றால் சுதந்திரா கட்சியாலோ அல்லது ஐக்கிய தேசிய கட்சியாலோ மட்டும் வழிநடத்தப்படவில்லை. உண்மையை சொல்வதென்றால் இவர்கள் யாரும் தீர்மானகரமான ஆட்களே கிடையாது.

அதுபோலவே இலங்கையிலும் அதிகாரப் பிரிவுகள் உள்ளன. நிர்வாக அலகுகளுக்கான படிப்புகள் உள்ளன. 1966-ஆம் ஆண்டு முதல் “நிர்வாகக் கற்கைகளுக்கான கல்விநிலையம்” (Academy of Administrative Studies) செயல்படுகிறது. இதில் கற்று தேர்ச்சியடைகிறவர்கள் மூலம் SLAS (Sri Lanka administrative service) என்கிற இலங்கை நிர்வாக சேவை, SLEAS (Sri Lanka education administrative service) என்கிற இலங்கை கல்வி நிர்வாக சேவை, SLPS (Sri Lanka planing service) என்கிற இலங்கை திட்டமிடல் சேவை போன்ற அதிகார நிர்வாக பதவிகள் நிரப்பப்படுகின்றன.

இப்பதவிகளில் தேர்ச்சியடைந்தவர்கள்தான் இலங்கையில் அமைச்சக செயலாளர்களாக பொறுப்புக்கு வருகிறார்கள். செயலகங்களுக்கு கீழே திணைக்களங்கள் செயல்படுகின்றன. இந்த அதிகாரவர்க்கங்களின் செயல்பாடுகள் அந்நாட்டின் நிகழ்ச்சிப்போக்கில் முக்கியத்துவமுடையதாகும்.

இப்போது கொஞ்சம் சிந்திக்கலாம். இலங்கை திவாலாகும் மட்டும் இந்த நிர்வாக ஆட்சியாளர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? அவர்கள் செய்ததெல்லாம் ஒன்றுதான், இப்படி திவாலாவதற்கு ஒத்துழைத்துக் கொண்டிருந்தார்கள். ஏனெனில் அவர்களையும் சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகள் மூலம் ஏகாதிபத்தியங்கள்தான் வழிநடத்தியது.

விசயம் இவ்வளவுதான்

நாமெல்லாம், இலங்கை திவாலாகியிருப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளோம். ஆனால், இது தொடக்கம்தான் இன்னும் பலநாடுகள் இதுபோல திவாலாக காத்திருக்கின்றன என்று உலக வங்கி சர்வசாதரணமாக கூறியுள்ளது. குறிப்பாக துருக்கி, எகிப்து, துனிசியா, பாகிஸ்தான், கானா, கென்யா, தென்னாப்ரிக்கா, எத்தியோப்பியா, அர்ஜைன்டினா, எல் சால்வடார், பெரு என உலகவங்கியின் பட்டியல் நீளுகிறது.

இலங்கை மக்களுக்கு இந்த பட்டியல் மிகவும் கவனத்திற்கு உரியதாகும். காரணம் இந்த பட்டியலில் உள்ள எகிப்து, துனிசியா உள்ளிட்ட நாடுகளில் மாபெரும் “அரபு வசந்தம்” மற்றும் “மல்லிகைப் புரட்சி” நடந்ததாக பீற்றிக்கொள்ளப்படுகிறது. இப்போது இலங்கையிலும் கூட ஏதோ ஒரு வசந்தம் வீசுவதாக புரளி கிளப்பப்படுகிறது.

புரட்சி என்பது அதிகாரத்திலிருக்கிற வர்க்கத்தை அல்லது வர்க்கங்களை வீழ்த்திவிட்டு மற்றொரு வர்க்கத்தின் அல்லது வர்க்கங்களின் அதிகாரத்தை நிறுவுவது; அதன் மூலம் உற்பத்தியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவது ஆகும். அப்படியான புரட்சிக்கான போராட்டம் என்பது புதிய உற்பத்திக்கான அரசியல் தலைமையை கொண்டிருக்கும் என்பது தவிர்க்க முடியாத விதி.

அப்படியொரு தலைமை இல்லையென்றால், அப்போராட்டம் உற்பத்தி மாற்றத்தை கோரவில்லை என்றால், அங்கே ஆளும்வர்க்கத்தின் கைகள் இருக்கிறது என்பது உறுதி.

அப்படித்தான் இப்போது இலங்கை பற்றி எரிகிறது. இலங்கையின் போராட்டம் தான் திவாலாக்கப்பட்ட காரணங்களை கண்டுகொள்ளவில்லை; திவாலாக்கப்பட்ட பாதையை நிராகரிக்கவில்லை; இலங்கை போன்ற நாடுகளை திவாலாக்குவதுதான் ஏகாதிபத்தியங்களின்

பொருளாதாரக் கொள்கை என்பதை குறித்து கவலைப்படவில்லை.

மாறாக, ஊழல்களால்தான் இலங்கை திவாலாகியது என்று பட்டியலிடப்படுகிறது. Anonymoushelpsrilanka என்பது இரகசியங்களை கண்டறிந்து வெளிக்கொண்டு வரும் நிறுவனமென்று சொல்லப்படுகிறது. இந்த குழு கண்டுபிடித்த இராஜபக்சேவின் சொத்துக்களின் பட்டியல் ஒன்று அண்மையில் வெளிவந்துள்ளது. (தோழர் திருமேனி – Thirumeni GT – அவர்களின் முகநூலில் உள்ளது).

இதில் ஒரு வேடிக்கை உள்ளது. இந்த குழுவானது, ராஜபக்சேக்கள் பதவி விலக 14 நாட்கள் அவகாசம் வழங்குவதாக இக்குழுவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் சொல்லப்பட்டிருந்ததாம். அப்படி விலகாததால்தான் பட்டியல் வெளியிடப்பட்டதாம். பேரம் எதுவாக இருந்தாலும் குழு வெளியிட்ட விபரங்கள் முக்கியமானது. அதை பார்ப்போம்.

ராஜபக்ச குடும்பம் இலங்கையில் (இலங்கையின் உள்ளே) தங்கள் முறைகேடான ஆதாயங்களுடன் முதலீடு செய்ததை முதல் பகுதி காட்டுகிறது. இரண்டாம் பாகம் இலங்கைக்கு வெளியே (இலங்கைக்கு வெளியே) ராஜபக்சே குடும்பம் செய்த முதலீடுகளைக் காட்டுகிறது.

R-S தாள்கள் A – வகை 1 / நாட்டில் ராஜபக்ச குடும்பம் செய்த முதலீடுகள் * இல. 276/4, நீர்கொழும்பு வீதி, வத்தளையில் உள்ள சொத்து – இந்த சொத்து ரோஹித ராஜபக்ஷவால் வாங்கப்பட்டது.* பட்டர் பூட்டிக் சூப்பர் உணவகம் – கொழும்பில் உள்ள ஒரு ஆடம்பர உணவகம். யோஷித ராஜபக்ச இங்கு மறைந்திருக்கும் உரிமையாளர்.

* பெரேரா & சன்ஸ் (PnS) – நாடு தழுவிய உணவக சங்கிலி. நாமல் ராஜபக்ச 500 மில்லியன் ரூபாவை முதலீடு செய்துள்ளார்.

* ரிச்சி டீ – ஒரு தேயிலை உற்பத்தி தொழில். இது சமல் ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கப்பட்ட 35 மில்லியன் ரூபா வர்த்தக முயற்சியாகும்.

* மெல்வா சீமெந்து – பசில் ராஜபக்சவுக்கு 60% உரிமை உள்ளது.

* பிரமிட் வில்மர் நிறுவனம் – இலங்கையில் இயங்கும் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று. இது ராஜபக்ச குடும்பத்தின் பணத்தை முதலீடு செய்து நடத்தப்படும் தொழில்.

* டெம்பிள் குரூப் – ரூ.21 பில்லியன் வருடாந்த விற்றுமுதல் கொண்ட இலங்கையின் இயங்கு நிறுவனம். சுவிஸ் வங்கிகளின் வருடாந்த வருமானம் ராஜபக்ச குடும்பத்தின் உரிமையாளரான டட்லி சிறிசேனவினால் இங்கு டெபாசிட் செய்யப்படுகிறது.

* Ministry of Crab – இலங்கை சூப்பர் உணவகங்களின் உலகளாவிய சங்கிலி. முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தனவுடன் நாமல் ராஜபக்ச 40% பங்குகளை வைத்துள்ளார்.

* கொலம்பா – ஒரு உணவகம். யோஷித ராஜபக்ச 70% பங்குகளை வைத்துள்ளார்.

* பிஸி பீன் கஃபே – ராஜபக்ச குடும்பத்தினர் பணத்தை முதலீடு செய்த மற்றொரு உணவகம்.

* Rythm and Blues (RNB) – V.I.P என்பது விருந்தினர்களுக்காக பிரத்தியேகமாக இலங்கையில் உள்ள சிறந்த இரவு விடுதிகளில் ஒன்றாகும். ரோஹித ராஜபக்ச 200 மில்லியன் ரூபாவை முதலீடு செய்து மதுபான உரிமங்களை வழங்கியுள்ளார்.

* Camera.lk – விமல் வீரவன்ச மூலம் ராஜபக்ச குடும்பம் செய்த முதலீடு. தற்போது இலங்கை முழுவதும் ஒரு கேமரா கடை உள்ளது.

* ஹெலகுரு & ஹெல பே – இலங்கையின் முன்னணி IT வணிகங்களில் ஒன்று. தனிக பெரேரா என்ற நபரின் ஊடாக ரோஹித ராஜபக்ச 80 மில்லியன் ரூபாவை முதலீடு செய்து இந்த தொழிலை ஆரம்பித்துள்ளார்.

* MAS ஹோல்டிங்ஸ் (18% பங்கு) – இலங்கையின் முன்னணி ஏற்றுமதியாளர். மகிந்த ராஜபக்சவுக்கு 18% வர்த்தகம் உள்ளது. அதுதான் புதிய ஆடைத் தொழிற்சாலைகள் தொடங்க கொடுக்கப்பட்ட நிலத்தின் மதிப்பு.

* கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரின் பெயர்களில் நாடு முழுவதும் காணிகள் கொள்வனவு செய்யப்படுகின்றன. உண்மையான உரிமையாளர் நாமல் ராஜபக்ஷ.

* மஹாராஜா குழுமத்தின் 18% பங்குகளை செவன் டேனியல் என்ற நபர் மூலம் நாமல் ராஜபக்ச மகாராஜா வாங்கியுள்ளார். இதன் பெறுமதி 760 மில்லியன் ரூபா.

* Roar Media Network – Royal Raymond என்ற பெண் மூலம் நாமல் ராஜபக்ச வங்கதேசத்தில் Roar Media Network ஐ வாங்கியுள்ளார்.

* Siyatha Media Network – யோஷித ராஜபக்ச அர்ஜூன் அலோசியஸுக்கு சொந்தமான சியத ஊடக வலையமைப்பில் 3% முதலீடு செய்துள்ளார்.

R-S தாள்கள் மூலம் A – தொகுதி II / வெளிநாட்டில் ராஜபக்ச குடும்பம் செய்த முதலீடுகள்

கஃபே சிலோன் – உகாண்டா – $ 1 மில்லியன் மதிப்பு.

* உகாண்டா ஏர்லைன்ஸின் ஆறு விமானங்களில் இரண்டு – 800 மில்லியன் டாலர் முதலீட்டில் ராஜபக்சே குடும்பத்திற்கு சொந்தமானது.

* இங்கிலாந்தில் உள்ள நியூ கேஸில் கால்பந்து அணியின் பங்குகள் – சவூதி இளவரசர்களிடம் ராஜபக்சே குடும்பத்தின் 420 மில்லியன் டாலர் முதலீடு.

* சீஷெல்ஸ் லா டியாகோ தீவு – ரோஹித ராஜபக்ச தனது மனைவியை வாங்கியுள்ளார். இதன் மதிப்பு $60 மில்லியன்.

* தென்னிந்திய சூப்பர் ஸ்டார் விஜய்யின் சர்கார், மாஸ்டர், பிகில் படங்களை இந்திய நிறுவனங்கள் மூலம் ரோஹித ராஜபக்சே தயாரித்துள்ளார். இதன் மதிப்பு 220 மில்லியன் டாலர்கள்.

* Naughty America Pornography Company – ரோஹித ராஜபக்ச $20 மில்லியன் முதலீடு செய்துள்ளார்.

* மிரிஹி ஐலண்ட் ரிசார்ட் – மாலத்தீவுகள், $ 20 மில்லியன் மதிப்புடையது.

* மரதூ தீவு – மாலத்தீவு, $26 மில்லியன் மதிப்பு. ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த உதயங்க வீரதுங்க இந்த உரிமையை பெற்றுள்ளார்.

* டியாஜியோ – இங்கிலாந்தில் உள்ள ஒரு நிறுவனம். இதன் மதிப்பு 120 பில்லியன் டாலர்கள்.

* பாப்லோ பிக்காசோவின் அழுகை பெண் ஓவியம் – வெளிநாட்டு பெட்டகத்தில் சேமிக்கப்பட்டது. இதன் மதிப்பு 100 மில்லியன் டாலர்.

* மடகாஸ்கரின் இலகாக்கா பகுதியில் உள்ள நீலக்கல் சுரங்கம் 3 மில்லியன் டாலர் முதலீட்டில் கோத்தபாய ராஜபக்சவால் நடத்தப்படுகிறது.

* தான்சானியாவில் உள்ள சின்ஜியாங் வைரச் சுரங்கம் – கோத்தபாய ராஜபக்சவுக்குச் சொந்தமானது, இதன் மதிப்பு 7 மில்லியன் டாலர்கள்.

* பனாமா கொடியிடப்பட்ட கிரேஸ் ஆஃப் ராணி – மதிப்பு $30 மில்லியன்.

* ஏழு சொகுசு படகுகள் – ராஜபக்ச குடும்பத்தினரால் பாலி, மாலத்தீவு மற்றும் பிற நாடுகளில் விடுமுறையில் இயக்கப்பட்டது. இதன் மதிப்பு 850 மில்லியன் டாலர்கள்.

* சீனாவின் பைடு நிறுவனம் – யோஷித ராஜபக்ச பங்குகளை வைத்துள்ளார். இதன் மதிப்பு 7 பில்லியன் டாலர்.

* துபாய் மேரியட் ஹோட்டல் – $ 7 பில்லியன் மதிப்பு

* துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் மூன்று சொகுசு வீடுகள் – நந்தன லொக்குவிதான என்ற நபர் மூலம் ராஜபக்ச குடும்பத்தினர் செய்த முதலீடு. இதன் மதிப்பு 140 மில்லியன் டாலர்கள்.

* ஷென்யாங் கோட்டியார் விமான உற்பத்தி நிறுவனம். லிமிடெட் – ஒரு சீன இயக்க நிறுவனம். 20 பில்லியன் டொலர் பெறுமதியான மஹிந்த ராஜபக்ஷ இணை உரிமையாளர் ஆவார்.

* லைகா மொபைல் – இங்கிலாந்தில் உள்ள ஒரு தொலைபேசி நிறுவனம். தமிழ் வம்சாவளியைச்

சேர்ந்த இலங்கை நபர் மூலம் இயக்கப்பட்டது. உண்மையான உரிமையாளர் மஹிந்த ராஜபக்ஷ. இதன் மதிப்பு 40 பில்லியன் டாலர்.

* De La Rue PLC – நிறுவனத்தின் 13% பங்கு ராஜபக்ச குடும்பத்திற்கு சொந்தமானது.

* அதானி குழும நிறுவனங்கள், இந்தியா – இந்தியாவில் ஒரு பில்லியனர் நிறுவனம். நாமல் ராஜபக்ச 20% பங்குகளை வைத்துள்ளார்.

* குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் அணி – $150 மில்லியன். ரோஹித ராஜபக்ச செய்த முதலீடு.

* வரலாறு உச்ச பாய்மரக் கப்பல்

* புர்ஜ் துபாய் ஹோட்டல் – $ 1 பில்லியன்

* அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் கவ்பாய்ஸ் அணியில் 30% – உலகப் புகழ்பெற்ற பேஸ்பால் அணி. புஷ்பா ராஜபக்ச 2 பில்லியன் டொலர் பெறுமதியான பங்குகளை வைத்துள்ளார்.

* இங்கிலாந்தில் உள்ள அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் நிறுவனத்தில் ஷசீந்திர ராஜபக்சே 11% பங்குகளை வைத்துள்ளார்.

*ஹோலோகிட்டி மூலம் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ராணுவ மற்றும் ரகசிய உபகரண உற்பத்தி நிறுவனமான தேல்ஸ் நிறுவனத்தில் 29% பங்குகளை மகிந்த ராஜபக்ச பெற்றுள்ளார். அவர் இரண்டாவது பெரிய ஒற்றை பங்குதாரர் ஆவார். முதல் உரிமையாளர் பிரபல முன்னாள் பிரிட்டிஷ் பிரதமரான வின்ஸ்டன் சர்ச்சிலின் மகன்.

* உலகின் மிகப்பெரிய ஒப்பந்த நிறுவனமான ARUP இன் அதிகாரப்பூர்வமற்ற உரிமையாளர்கள் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நிறுவனத்தின் மூலம் சட்டப்பூர்வமாக பணம் பரிமாற்றம் செய்ய அனைத்து முறைகேடான ஆதாயங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மதிப்பு சுமார் 2302 மில்லியன். உதயங்க வீரதுங்க நிறுவனத்தின் உத்தியோகபூர்வமற்ற பிரதம நிறைவேற்று அதிகாரி ஆவார்.

* குமரன் பத்மநாதனுக்குச் சொந்தமான 3 தாய்லாந்து கப்பல் நிறுவனங்கள் (பெயர்கள் வெளியிடப்படவில்லை)

* சூப்பர் கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்தன ஆகியோரின் பெயர்களில் நாடு முழுவதும் காணிகள் வாங்கப்படுகின்றன. சீகிரியாவில் காணிகளை கொள்வனவு செய்த போது சங்கக்காரவும் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

* ரோஹித ராஜபக்ச, ரூ.200 மில்லியன் மொபைல் போன் இறக்குமதியாளரான Walk & Talk (PVT) Limited நிறுவனத்திற்குச் சொந்தமானவர்.

* அரசாங்கத்தின் மிகவும் நட்புறவான தொலைத்தொடர்பு வலையமைப்பான டயலொக்கில் 38%

பங்குகளை ஷசீந்திர ராஜபக்ச வைத்துள்ளார். தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடனேயே அவர்களுக்கு பலகோடி வரிச்சலுகைகள் வழங்கப்பட்டன

* ராஜபக்ச குடும்பம் சீன நிறுவனம் ஒன்றின் ஊடாக ஜோன் கீல்ஸ் பிஎல்சி குழுமத்திற்கான பாதையில் 12 பில்லியன் ரூபாவை முதலீடு செய்துள்ளது. ஹேமாஸ் மற்றும் யூனிலீவர் நிறுவனமும் ரூ. சுமார் 10 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது

* ஷசீந்திர ராஜபக்சே இலங்கையில் விபச்சார தொழிலையும் நடத்தி வருகிறார். இங்கே அவரது வணிக மேலாளர் சுரேந்திர வசந்த பெரேரா (கிளப் வசந்தா). சமல் ராஜபக்ச தனது சன்ஹில் ஹோட்டல் சங்கிலியின் உண்மையான உரிமையாளர். இதற்கு உக்ரேனிய விபச்சாரிகளை உதயங்க வீரதுங்க வழங்குகிறார். உக்ரைன், ரஷ்யா மற்றும் உலகம் முழுவதும் உள்ள விபச்சாரிகளின் Utopia வலையமைப்பையும் உதயங்க வீரதுங்க வைத்துள்ளார்.

* உக்ரைனில் பிரபலமான மிதக்கும் விபச்சார விடுதியான ரிவர் பேலஸ் என்ற சொகுசு படகின் உரிமையாளரும் உதயங்க வீரதுங்க ஆவார். மிக் ஒப்பந்தத்திற்குப் பிறகு அவர் அதை வாங்கினார், பின்னர் திவாலானார்.

* உலகின் மூன்றாவது பெரிய La Belle விபச்சார விடுதி, தாய்லாந்து – உரிமையாளர் உதயங்க வீரதுங்க, $ 2 பில்லியன் மதிப்பு.

* தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம், லிமிடெட் – யோஷித ராஜபக்சவுக்கு சொந்தமானது. 40 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகள் உள்ளன.

* டார்செல் கிளப் ஆபாச திரைப்பட நிறுவனம் – ரோஹித ராஜபக்ஷ $ 5 மில்லியன் முதலீடு செய்துள்ளார்.

* துஷி ஆபாச படங்கள் – ரோஹித ராஜபக்ச $11 மில்லியன் முதலீடு செய்துள்ளார்.

* நாமல் ராஜபக்ச இந்திய நடிகர் சல்மான் கான் மூலம் பாலிவுட்டில் 2 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளார்.

* நிபுன ரணவக்க, அமெரிக்காவை தளமாகக் கொண்ட இன்டர்நெட் நிறுவனமான ஸ்டார்லிங்கில் $70 மில்லியன் பங்குகளை வாங்குகிறார்.

* நாமல் ராஜபக்ச தனது மனைவிக்கு 350 மில்லியன் டாலர் நம்பிக்கை வைரத்தை திருமண பரிசாக வழங்கினார்.

* 2005 மற்றும் 2015 க்கு இடையில் லேண்ட் ரோவர், ஜீப், அஸ்டன் மார்ட்டின் மற்றும் புகாட்டி ஆகிய நிறுவனங்களின் சுமார் 15% பங்குகளை ராஜபக்சே குடும்பத்தினர் வாங்கியுள்ளனர்.

* அனோமா ராஜபக்ச டோல்ஸ் & கபானா, அர்மானி, பிராடா, குஸ்ஸி, பர்பெரி, டியோர், லூயிஸ் உய்ட்டன், ரால்ப் லாரன், எஸ்சென்ஸ் மற்றும் மைக்கேல் கோர்ஸ் ஆகிய நிறுவனங்களில் 40% பங்குகளை வாங்கியுள்ளார்.

* சுமார் 600 பில்லியன் டாலர் மதிப்புள்ள பத்திரங்கள், தங்க பிஸ்கட்கள் மற்றும் டெபாசிட்கள் சுவிஸ் வங்கி, எக்சிம் வங்கி, ஜேபி மோர்கன் சேஸ், சைனா கன்ஸ்ட்ரக்ஷன் வங்கி, பேங்க் ஆஃப் சீனா மற்றும் பார்க்லேஸ் வங்கி கணக்குகளில் செய்யப்பட்டுள்ளன.

* கிரிபோடோ கரன்சியில் பெரும் தொகை மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அது ஒரு டிரில்லியன் டாலர்கள் என்றும் அநாமதேய குழு வெளிப்படுத்துகிறது.

ராஜபக்ச குடும்பத்திற்குச் சொந்தமான வணிகங்களும் அவற்றை நடத்துபவர்களும் வளைகுடாப் போராட்டத்திற்கு அவர்களின் எதிர்கால விதியை முன்னறிவிப்பதற்காக உதவி செய்திருக்கலாம் என்பதும் சிந்திக்கத்தக்கது.

இந்த மதிப்பீடுகளின்படி ராஜபக்சக்கள் சுமார் ஒரு டிரில்லியன் டொலர் சொத்துக்களை திருடியுள்ளனர். இந்தத் தொகை ஒரு டிரில்லியன் இலங்கை ரூபாயாகும். (1,050,000,000,000,000 LKR) – அநாமதேய ஹேக்கர்களின் குழுவால் கண்டறியப்பட்ட அனைத்து தரவுகளுக்கும் மேலே உள்ள தரவு பொறுப்பாகும் என்று Anonymoushelpsrilanka கூறியுள்ளது.

உண்மையில் இந்த பட்டியல் ஒரு சாதாரண மனிதனை நிலையகுலைய செய்யும்தான். அது அச்சாதாரண மனிதனின் அரசியல் குறைபாடு சார்ந்ததேயாகும். ஊழல் என்பது முதலாளித்துவத்துடன் ஒட்டிப் பிறந்தது என்பதையும்; தன்னை முதலாளித்துவத்திற்கு அர்பணித்துக் கொண்ட விதிவிலக்குகளுக்கு வேண்டுமானால் ஊழலில் பங்கு அவசியப்படாது போகும் என்பதையும்; அப்படி அவசியப்படாத ஒருவரை தவிர்த்து ஒட்டுமொத்த நிர்வாகமும் ஊழலில் திளைத்துக் கொண்டுதான் இருக்கும் என்பதையும் குறித்த அரசியல் அறிவு இருக்கிற யாருக்கும் ஏகாதிபத்தியங்களுக்கு இலங்கையை தாரைவார்த்த இராஜபக்சேக்களிடம் இவ்வளவு சொத்துக்கள் குவிந்திருப்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

அதேபோல அரசியல் அறிந்தவர்களுக்கு, இந்த ஊழலை வெளிக்கொண்டு வந்தவர்களின் நோக்கமும் கூட ஒரு ஊழலற்ற இலங்கையை உருவாக்குவதல்ல என்பதும்; இலங்கையின் உண்மையான எதிரிகளான ஏகாதிபத்தியங்களை பாதுகாத்து, அடியாட்களை மட்டும் பலிகொடுப்பதுதான் என்பதும் இயல்பாகத் தெரியும்.

இதோ இவர்கள் எதிர்பார்த்தபடி, ஒரு இராஜபக்சே பதவி விலகி தலைமறைவாகி விட்டார். இரணில் வந்ததும் உலக வங்கி உட்பட ஏகாதிபத்தியங்கள் இலங்கைக்கு புதிய கடன்களை வழங்க தயாராகிவிட்டன.

ஒன்றும் புதிதில்லை, அவ்வளவுதான்.

ஈழம் எரிந்ததும் இலங்கை எரிவதும்

ஈழ விடுதலையை தடுப்பதும், இறுதிப்போரில் இனப்படுகொலையை நிகழ்த்தியதும் என எல்லாவற்றுக்கும் இலங்கையின் ஆட்சியாளர்கள்தான் காரணமென்று கருதிக்கொண்டிருக்கிற அப்பாவிகள், ஈழ மக்களின் சாபத்தால்தான் இலங்கை எரிகிறது என்று ஆறுதலடைகிறார்கள். இவர்களுக்கு, இலங்கையின் அனைத்துப் பிரச்சனைகளும் ஈழத்தையும் உள்ளடக்கியதுதான் என்று தெரிவதில்லை.

ஒருவேளை, ஈழத்தையும் உள்ளடக்கிய இலங்கையின் பிரச்சனைக்கு ஒரு நீண்டகால வரலாறு உள்ளதென்பதையும்; அவ்வரலாற்றின் ஊடாகத்தான் ஈழ விடுதலை போராட்டமும் நிகழ்ந்தது என்பதையும்; சிங்கள ஆளும்வர்க்கங்களுக்கும் மேலான சூப்பர் பவர் சக்திகள் இலங்கையை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும்; அது ஒருநாள் இலங்கை முழுவதையும் பற்றி எரியச் செய்யும் என்பதையும் அப்பாவிகள் முன்பே புரிந்திருந்தால் ஈழம் இவ்வளவு பெரிய இன அழிவை சந்தித்திருக்காது.

முள்ளிவாய்க்கால் தினத்தை நெஞ்சிலேந்துவோம்!

ஈழ விடுதலை போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்!

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *