கொடூர கொலைகளை
காண்கிறீர்கள்
எல்லாம் கட்டிவிட்ட கதையென
அப்பொழுதும்
காதுகளையும் கண்களையும்
மூடிக் கொள்கிறீர்கள்
உங்கள் ஈகோ
உண்மையை ஏற்க மறுக்கிறது
அது சக மனிதன் மேல்
வன்மத்தை தூவுகிறது
நன்று
உங்கள் கனவுகளில்
பாலாறும் தேனாறும்
ஓடட்டும்
நீங்கள் நீந்திக் கழிக்க
இங்கு ரத்தத்தால்
ஆறுகள் உருவாக்குகிறார்களாம்
அதில் மூழ்கும் பொழுது
மூக்கை பிடித்துக் கொள்ளுங்கள்
எங்கள் பிணங்களின் வீச்சம்
உங்களை பாதித்துவிடப் போகிறது
– ஜீவா