Contact Information

பொன்னுலகம் புத்தக நிலையம்
4/413 பாரதி நகர், 3வது வீதி,
பிச்சம்பாளையம்
திருப்பூர் - 641603
+91 8610193433
+91 7010484465
ponnulagampuththaganilaiyam@gmail.com

அந்த வேதம்
சாத்தானை ஓதிக்கொண்டிருக்கின்றது

தித்திக்கும் பாவக்கனியை ஊட்டிய தேவனை
சங்கு சக்கரங்களால் வெட்டி
பூமியை சுற்றவைத்த

பிட்டுக்கு சிலுவை சுமந்து
பெற்ற சவுக்கடியை
உலகுக்கே பகிர்ந்த

வௌவால் சிலுவையில்
தொங்கிய நோன்பை
சிரமறுத்து உதிரம் குளித்த

ஊமைகளைப் பாடவைக்கப்
திருப்பாலீந்த

பகைவர்க்கும் அன்பு செய்யும்
அன்பேயான

மலைப்பிரசங்கத்தை சுண்டுவிரலில்
நிகழ்த்திய

மேய்ப்பனும்
ரட்சகனும்
உற்சவனுமான

சாத்தானை
வேதம் ஓதிக்கொண்டிருக்கின்றது

– சத்யா

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *